நான் காதல் சொன்னபோது
12 ஆடி 2026 ஞாயிறு 05:48 | பார்வைகள் : 942
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...
நீரிடம் காதல் சொன்னேன்
முத்தமிட்டு சென்றது
மழைச் சாரல்
ஆகாயத்திடம் காதல் சொன்னேன்
வண்ணமாய் சிரித்தது
வானவில்
காற்றிடம் காதல் சொன்னேன்
காவியமாய் மலர்ந்தது
காகிதப் பூக்கள்
நிலத்திடம் காதல் சொன்னேன்
வழிவகுத்து நின்றது
உன் வீட்டுச் சாலை
நெருப்பிடம் காதல் சொன்னேன்
உயிர்ப்பாய் எழுந்தது
வெட்கச் சுடர்
உன்னிடம் காதல் சொன்னேன்
ஆறாம் பூதமாய் ஆக்கிரமித்தாய்
பஞ்சபூதங்களின் எல்லையையும் கடந்துபோய்...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire