Sarcelles: வாகனம் ஒன்றில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து 300 பேர் வெளியேற்றம்!!
12 ஆடி 2026 ஞாயிறு 21:58 | பார்வைகள் : 354
Sarcelles நகரில் உள்ள ஒரு யூதவழிபாட்டுத்தலம் அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை திரையரங்கம், கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து சுமார் 300 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வாகனம் யூத சமூகத்தை குறிவைத்து பயன்படுத்தப்படலாம் என உள்நாட்டு உளவுத்துறை (DGSI) சந்தேகித்தது.
வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், அந்த காரில் தாக்குதல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட போர் பயன்பாட்டுக்கான ஆயுதங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அந்த வாகனம் திருடப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு அரசு வழக்கறிஞர் அலுவலகம் (PNAT) விசாரணையைத் தொடங்கியுள்ளது. சம்பவத்தின் நோக்கம் மற்றும் இதில் தொடர்புடைய நபர்களின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire