தேசிய தினக் கொண்டாட்டம்: 188 பேர் கைது!!
14 ஆடி 2026 செவ்வாய் 22:24 | பார்வைகள் : 630
தேசிய தினக் கொண்டாட்டங்கள் தொடங்கிய ஜூலை நேற்று இரவு நாடு முழுவதும் 188 பேர் கைது செய்யப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் லோரன் நுன்யெஸ் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே காலத்தில் 389 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
அமைச்சரின் தகவலின்படி, 140 நகரங்களில் நகர்ப்புற வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இருப்பினும், காவல்துறையும் ஜொண்தாமெரியும் விரைவாக தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததால், மொத்த நிலைமை திருப்திகரமாக இருந்ததாக அவர் மதிப்பிட்டார்.
காவல்துறையினரை நோக்கி பயன்படுத்தப்பட்ட பட்டாசு மோர்டார்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 650 முறை பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 300-க்கும் சற்றே அதிகமாக இருந்தது. அதேவேளை, பறிமுதல் செய்யப்பட்ட மோர்டார்களின் எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டு அது சுமார் 150 ஆக இருந்தது.
தேசிய தினக் கொண்டாட்டங்களின் இரண்டாம் கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரான்ஸ்–ஸ்பெயின் கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை முன்னிட்டு, நாடு முழுவதும் 70,000 காவல்துறையினரும் ஜொண்தாமெரி அதிகாரிகளும், அதில் 7,000 பேர் பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire