Paristamil Navigation Paristamil advert login

காட்டுத்தீ தடுப்பில் புதிய தொழில்நுட்பங்கள்-தீயணைப்புப் படையின் AI தொழில் நுட்பம்

காட்டுத்தீ தடுப்பில் புதிய தொழில்நுட்பங்கள்-தீயணைப்புப் படையின் AI தொழில் நுட்பம்

15 ஆடி 2026 புதன் 09:39 | பார்வைகள் : 199


பிரான்சில் அதியுச்சக் கோடைகால வெப்பத்தினால் பிரான்சில் மிக மோசமான காட்டுத் தீ பரவுகின்றன. ஏற்கனவே 25,000 ஹெக்டேர்களுக்கு மேலான பரப்பளவை காட்டுத் தீ எரித்துள்ளது.

இந்த சூழலில், தீயணைப்பு படைகள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தங்கள் செயல்திறனை அதிகரித்து வருகின்றனர்.

அதற்காக தீயணைப்பு படைகள்:

வெப்பப் பரவலைக் கண்டறியும் ஒளியுணர்வு கருவிகள்  (caméras thermiques)

செயற்கைக்கோள் படங்கள்

AI மூலம் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள்

போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

இதன்மூலம்

தீ ஆரம்பித்த சில வினாடிகளில் அது கண்டறியப்படுகிறது.

பாரம்பரிய முறைகளை விட மிக வேகமான எச்சரிக்கையை இது வழங்குகின்றது.


தீ ஆரம்பத்தின் முதல் அறிகுறிகளை, தானியங்கி முறையில் மிக விரைவாக கண்டறிவதே நோக்கம்.

ட்ரோன்கள்

வானூர்திகளில் பொருத்தப்பட்ட உயர் துல்லிய கண்காணிப்பு கருவிகள்

இவற்றை பயன்படுத்தி:

காட்டின் அதிக அபாய பகுதிகளை  நேரடியாக கண்காணிக்கின்றனர்

புகை, வெப்பம், தீ பரவல் திசைகள், ஆகியவற்றை உடனடியாக கண்டறிகின்றனர்


AI — அவசர அழைப்புகளை நிர்வகிக்கவும் உதவுகிறது

தீயணைப்பு படைகள் தினமும், ஆயிரக்கணக்கான அவசர அழைப்புகளை பெறுகின்றனர்

அவற்றில் எது மிக அவசரம் என்பதை, உடனடியாக தீர்மானிப்பது சிரமம்

இதற்காக சில மாவட்டங்கள், புதிய AI உதவியுடன் செயல்படும் அழைப்பு நிர்வகிப்பு கருவியை  சோதனை செய்கின்றன.

AI,

அழைப்புகளை உடனடியாக எழுத்தாக்கம் செய்கிறது

உரையாடலை சுருக்கமாக தொகுக்கிறது

அவசரத்தன்மையை விரைவாக மதிப்பிட உதவுகிறது

இதனால்,

தீயணைப்பு படைகள் மிகுந்த நேரத்தைச் சேமிக்கின்றனர்.

இந்த நவீன தொழில் நுட்பங்கள் பல உயிரிழப்புகளையும் பெரும் சேதங்களையும் தடுக்க உதவி செய்கின்றன.