Paristamil Navigation Paristamil advert login

Livret A சேமிப்புக் கணக்கின் வட்டி 1.7 சதவீதமாக அதிகரிப்பு!!

Livret A சேமிப்புக் கணக்கின் வட்டி 1.7 சதவீதமாக அதிகரிப்பு!!

15 ஆடி 2026 புதன் 16:14 | பார்வைகள் : 251


Livret A சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் 1.5% இலிருந்து 1.7% ஆக உயர்த்தப்படும் என்று பொருளாதார அமைச்சர் Roland Lescure இன்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில், Livret d'Épargne Populaire (LEP) எனப்படும் மக்கள் சேமிப்புக் கணக்கின் வட்டி 2.5% ஆகவே தொடரும்.

கடந்த சில மாதங்களாக பணவீக்கம் (Inflation) மீண்டும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்குப் போரின் தாக்கத்தால் எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்ததே இதற்கான முக்கிய காரணமாகும். ஜூன் மாதத்தில் பணவீக்கம் 1.8% ஆக இருந்ததாக INSEE தெரிவித்துள்ளது.

Livret A வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை இரண்டு முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது:

  1. கடந்த ஆறு மாதங்களின் சராசரி பணவீக்கம்.
  2. யூரோ மண்டல பணச் சந்தையின் குறியீட்டு வட்டி விகிதமான €STR (Ester).

இந்த முறையின் நோக்கம், பணவீக்கத்தால் சேமிப்பாளர்களின் பண மதிப்பு குறையாமல் பாதுகாப்பதாகும்.

சேமிப்பாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருமானம்

Cercle de l'Épargne அமைப்பின் பொருளாதார நிபுணர் பிலிப் கிரெவெலின் கணக்குப்படி:

  • €7,800 (சராசரி வைப்ப) வைத்திருக்கும் ஒருவர், ஆண்டுக்கு €117 வட்டிக்கு பதிலாக €132.60 பெறுவார். அதாவது €15.60 கூடுதல் வருமானம் கிடைக்கும்.
  • அதிகபட்ச வரம்பான €22,950 வைத்திருப்பவர்கள், €344.50க்கு பதிலாக €390.15 பெறுவார்கள். அதாவது €45.65 கூடுதல் வட்டி கிடைக்கும்.