EDF ஊழியர்களின் மின்கட்டணச் சலுகைக்கு நீதிமன்றம் எதிர்ப்பு!!
18 ஆடி 2026 சனி 15:40 | பார்வைகள் : 235
EDF ஊழியர்களுக்கான மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணச் சலுகை ("Tarif Agent") குறித்து கணக்காய்வாளர் நீதிமன்றம் (Cour des comptes) வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சலுகை நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்துவதால், தற்போதைய வடிவில் தொடர முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இதன் செலவு 700 மில்லியன் யூரோக்களைத் தாண்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை EDF, Engie, Enedis, GRDF உள்ளிட்ட நிறுவனங்களின் தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. பயனாளிகள் பொதுமக்கள் செலுத்தும் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணத்தின் சராசரியில் 2%க்கும் குறைவாக மட்டுமே செலுத்துகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கணக்கை தொழிற்சங்கங்கள் மறுத்துள்ளன.
இந்தச் சலுகையை மறுசீரமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. கணக்காய்வாளர் நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், சலுகை மற்றும் மின்சாரத்தின் உண்மையான சந்தை மதிப்பு இடையிலான வேறுபாட்டை மறுமதிப்பீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இறுதி முடிவு அமைச்சரவை ஆணை மூலம் அறிவிக்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எரிசக்தித் துறையின் முக்கிய தொழிற்சங்கங்கள் 2026 செப்டம்பர் 15 அன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. ஊழியர்கள் கடுமையாக உழைத்து வரும் நிலையில் இந்தச் சீர்திருத்தம் தேவையற்றது என்றும், இந்தச் சலுகையால் பொதுமக்களின் மின்கட்டணத்தில் மிகச் சிறிய தாக்கமே இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire