Paristamil Navigation Paristamil advert login

எரிபொருள் உதவித்தொகை விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு!!

எரிபொருள் உதவித்தொகை விண்ணப்ப காலக்கெடு  நீட்டிப்பு!!

23 ஆடி 2026 வியாழன் 15:37 | பார்வைகள் : 132


எரிபொருள் உதவித்தொகைக்கான விண்ணப்பக் காலக்கெடு ஜூலை இறுதியிலிருந்து ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 யூரோவைத் தாண்டியுள்ளதால், தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

100 யூரோக்கள் மதிப்புள்ள இந்த உதவித்தொகை, குறைந்த வருமானம் கொண்ட மற்றும் வேலைக்குச் செல்ல தனிப்பட்ட காரைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்காக வழங்கப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதுவரை சுமார் 1,2 மில்லியன் பேர் இந்த உதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் சுமார் 970 000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தகுதியானவர்களில் அனைவரும் இதைப் பயன்படுத்தவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

அடுத்த வாரம், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர்கள் பெர்சியில் எரிபொருள் விநியோக நிறுவனங்களுடன் சந்தித்து, விலை உயர்வை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.