Paristamil Navigation Paristamil advert login

ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் பறந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் பறந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

11 ஆவணி 2026 செவ்வாய் 18:28 | பார்வைகள் : 151


ஈரான் அச்சுறுத்தலால் ட்ரம்ப் ரகசியமாக சிறிய விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, ஈரான் சார்ந்த கொலை அச்சுறுத்தலின் காரணமாக, வழக்கமான Air Force One விமானத்தில் அல்லாமல், சிறிய Air Force C-32A விமானத்தில் ரகசியமாக புறப்பட்டார்.

மிகுந்த பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஊடகங்களும், சில வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ட்ரம்ப் பழைய Air Force One-இல் புறப்பட்டதாக நம்பினர். ஆனால் உண்மையில், அவர் விமான நிலையத்தில் உள்ள கேட்டரிங் லொறி மூலம் மறைமுகமாக சிறிய விமானத்திற்கு மாற்றப்பட்டார்.

புதிய Air Force One (Qatar வழங்கிய விமானம்) மாநாட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அச்சுறுத்தல் காரணமாக அதைப் பயன்படுத்தாமல், பாதுகாப்பான திட்டம் வகுக்கப்பட்டது.

ஊடகங்களுக்கு “ஜன்னல் திரைகளை மூடிக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தப்பட்டதால், அவர்கள் உண்மையான விமானத்தை அறிய முடியவில்லை.

ட்ரம்ப் புறப்பட்ட சிறிய விமானம் இரவு 10.20 மணிக்கு பிரித்தானியாவில் தரையிறங்கியது. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஊடகங்களை ஏற்றிச் சென்ற பழைய Air Force One தரையிறங்கியது.

இது அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை வெளிப்படுத்தும் சம்பவமாகும். ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக வெள்ளை மாளிகை மேற்கொண்ட இந்த ரகசிய நடவடிக்கை, உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.