26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்
24 ஆடி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 245
கல்வித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தீவிர நடவடிக்கை கோரி, கடந்த 26 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சென்று, மத்திய அரசு தரப்பில் உரிய உறுதிமொழி வழங்கியதை அடுத்து, இதனை ஏற்றுக் கொண்ட வாங்சுக், அவர்கள் வழங்கிய பழச்சாறை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் இறுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சோனம் வாங்சுக், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். போராட்டத்தின் இடையே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது கோரிக்கைகள் தொடர்பாக பார்லிமென்டிலும், அரசு மட்டத்திலும் ஆலோசனை நடத்தப்படும் என மத்திய அமைச்சர்கள் நேரில் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட வாங்சுக் சம்மதித்தார். இந்நிகழ்வின் போது சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ மற்றும் ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire