Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவின் சில பகுதிகளில் வறட்சி - பிரித்தானிய மக்கள் பாதிப்பு

பிரித்தானியாவின் சில பகுதிகளில் வறட்சி - பிரித்தானிய மக்கள் பாதிப்பு

24 ஆடி 2026 வெள்ளி 11:48 | பார்வைகள் : 162


குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடைகளால் 23 மில்லியன் பிரித்தானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட வேல்ஸ் மற்றும் அப்பர் செவர்ன் (Upper Severn) பகுதிகளில் வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இம்மாதத்திற்கான எதிர்பார்க்கப்பட்ட மழையளவில் 2 சதவீதத்திற்கும் குறைவான அளவே இதுவரை பதிவாகியுள்ளது.

மேலும், இப்பகுதியின் பெரும்பகுதிகளில் ஆறுகளில் பாயும் நீரின் அளவு மிகக் குறைவாக உள்ளது.

இந்தக் கோடையில் நாட்டின் பல பகுதிகளில் பரவலான வறண்ட வானிலை நிலவியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் வறட்சி நிலையை அறிவிக்கும் முதல் பகுதியாக இது அமைந்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான கோடைக்காலங்களில் ஒன்றை மக்கள் அனுபவித்து வரும் நிலையில், வறட்சி நிலையை அறிவித்த பிரித்தானியாவின் முதல் பகுதி இதுவாகும்.

ஜூலை மாதத்திற்கான சராசரி மழையளவில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே பிரித்தானியா பெற்றுள்ளதால், நாட்டின் பல பகுதிகள் நீண்டகால வறண்ட வானிலை நிலையை எதிர்கொண்டுள்ளன.

பிரித்தானியாவின் சில பகுதிகள் இதற்கு முன்பும், குறிப்பாக 2018 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளிலும் வறட்சியைச் சந்தித்துள்ளன. தொடர்ந்து நிலவும் வெப்பமான வானிலையால், லட்சக்கணக்கான குடும்பங்கள் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடையைச் சந்திக்க நேர்ந்துள்ளது. +

தேம்ஸ் வாட்டர் (Thames Water) நிறுவனம், தனது குடிநீர் வாடிக்கையாளர்களில் 10 மில்லியன் பேருக்குத் தற்காலிகமாக ஹோஸ்பைப் (hosepipe) பயன்பாட்டுத் தடையை விதித்துள்ளது. மேலும் 2.4 மில்லியன் வாடிக்கையாளர்கள் கட்டுப்பாடுகளுக்குள் வருவார்கள் என்று சவுத் ஈஸ்ட் வாட்டர் (South East Water) நிறுவனமும் இந்த வாரம் அறிவித்தது.

சசெக்ஸ், சர்ரே, ஹாம்ப்ஷயர் மற்றும் பெர்க்ஷயர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீடுகளும் தற்போது இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரித்தானியர் ஒருவர் ஹோஸ்பைப்பைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்; இருப்பினும், இதிலிருந்து சில விலக்குகளும் உள்ளன.

'புளூ பேட்ஜ்' (Blue Badge) வைத்திருப்பவர்கள், முன்னுரிமைச் சேவைகள் பதிவேட்டில் (Priority Services Register) உள்ளவர்கள் மற்றும் மருத்துவத் தேவைக்காகக் குழாய் (hose) மூலம் தண்ணீர் பயன்படுத்த வேண்டியவர்கள் ஆகியோருக்கு இவிதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, புதிதாகப் பதிக்கப்பட்ட புல்வெளியில் நான்கு வாரங்களுக்குப் பிறகு தண்ணீர் பாய்ச்சவும், செல்லப்பிராணிகளைச் சுத்தம் செய்யவும், மீன் குளங்களை நிரப்பவும் குழாயைப் (hose) பயன்படுத்தலாம்.