Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு!

நேபாளத்தில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு!

27 ஆடி 2026 திங்கள் 16:31 | பார்வைகள் : 239


கிழக்கு நேபாளத்தில் 26.07.2026 இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 26.07.2026 கிழக்கு நேபாளத்தின் சுன்சரி மாவட்டத்தில் உள்ள திவான்கஞ்ச், கப்தன்கஞ்ச் பஜார் பகுதி வழியாக சிலர் சப்தகோஷி நதியை நோக்கிப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளபோது, ஒரு தரப்பினர் உரத்த சத்தத்துடன் இசைக்கச்சேரி நடத்தியபடி சென்றுள்ளனர்.

இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது வன்முறை மோதலாக வெடித்துள்ளது.

இந்த மோதலின் போது வன்முறையாளர்கள் வீடுகள், வைத்தியசாலைகள் வாகனங்கள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துக்களைச் சூறையாடியதுடன், தீவைத்தும் கொளுத்தியுள்ளனர். இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்த பொலிஸார் , கலவரக்காரர்களைக் கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடும் நடத்தி இருந்ததாக கூறப்படுகின்றது.