Paristamil Navigation Paristamil advert login

அருங்காட்சியகங்களை குறிவைக்கும் கொள்ளைக் கும்பல்கள் - அதிகாரிகளை அதிரவைத்த ரகசிய அறிக்கை!!

அருங்காட்சியகங்களை குறிவைக்கும் கொள்ளைக் கும்பல்கள் - அதிகாரிகளை அதிரவைத்த ரகசிய அறிக்கை!!

28 ஆடி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 482


கடந்த ஒரு மாதத்திற்குள் மூன்று முக்கிய அருங்காட்சியகங்களில் இடம்பெற்ற துணிகர கொள்ளைச் சம்பவங்கள் அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, நாட்டின் அருங்காட்சியகங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உள்துறை பயன்பாட்டிற்கான ரகசிய அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவங்கள் கலாசார பாரம்பரியச் சொத்துகளின் பாதுகாப்பு குறித்து புதிய கவலையை எழுப்பியுள்ளன. 

குறிப்பாக, Louvre அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை, பின்னர் Bas-Rhin பகுதியில் உள்ள Musée Lalique-இல் பல மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்ட சம்பவம் உள்ளிட்ட தொடர் குற்றங்கள், திட்டமிட்டு செயல்படும் கொள்ளைக் கும்பல்கள் அருங்காட்சியகங்களை குறிவைத்து வருவதை விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. 

இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, கலாசார அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 3,127 அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரிய தளங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. கண்காணிப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசரகால பதிலளிப்பு அமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.