Paristamil Navigation Paristamil advert login

தென் ஆப்பிரிக்காவில் மூன்று பிரெஞ்சு குடிமக்கள் மர்மமாக உயிரிழப்பு!!

தென் ஆப்பிரிக்காவில் மூன்று பிரெஞ்சு குடிமக்கள் மர்மமாக உயிரிழப்பு!!

28 ஆடி 2026 செவ்வாய் 21:50 | பார்வைகள் : 260


தென் ஆப்பிரிக்காவில் மூன்று பிரெஞ்சு குடிமக்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பிரான்சின் la Manche மாவட்டத்தில் உள்ள Avranches பகுதியைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் ஒரு தம்பதியினரும், அவர்களுடன் பயணம் செய்த சிறுமியின் குடும்பத்தினரும் இருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவர்களில் ஒருவரின் முன்னாள் கணவரும், மற்றொருவரும் லக்ஸ்சம்பூர்கில் கைது செய்யப்பட்டனர். தென் ஆப்பிரிக்க அதிகாரிகளின் விசாரணையில் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே, சந்தேக நபர் தனது குடும்ப உறுப்பினருடன் மற்றும் அந்தச் சிறுமியுடன் ஐரோப்பாவுக்குத் திரும்பியதாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டார்.

இந்த வழக்கில், முக்கிய சந்தேக நபரின் சில உறவினர்களும் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சிறுமியைக் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்துவைத்தல் மற்றும் குற்றச்செயலைத் திட்டமிடும் குழுவில் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.