Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்ப அலை: 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – 42°C வரை வெப்பம் உயரும் அபாயம்!!

கடும் வெப்ப அலை: 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – 42°C வரை வெப்பம் உயரும் அபாயம்!!

29 ஆடி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 1843


புதிய வெப்ப அலை (Canicule) ஜுலை மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை முதல் தீவிரமடையவுள்ளதாக Météo-France அறிவித்துள்ளது. இதையடுத்து Ain, Ardèche, Doubs, Drôme, Gironde, Isère, Jura, Landes, Loire, Haute-Loire, Puy-de-Dôme, Rhône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie மற்றும் Territoire de Belfort ஆகிய 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Gironde மற்றும் Landes பகுதிகளில் மிகக் கடுமையான வெப்ப உச்சம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Gironde மற்றும் Landes பகுதிகளில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 42°C வரை உயரக்கூடும் என்றும், Aquitaine பிராந்தியத்தின் பல இடங்களில் 38°C முதல் 41°C வரை வெப்பம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வியாழக்கிழமை காலை 6 மணி முதல் வெப்பநிலை கணிசமாகக் குறையத் தொடங்குவதால், இந்த இரு மாவட்டங்களின் எச்சரிக்கை மஞ்சள் நிலைக்கு தளர்த்தப்படும் என Météo-France தெரிவித்துள்ளது.

அதேவேளை, நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் வெப்ப அலை நீடிக்கும் எனவும், அங்கு அதிகபட்ச வெப்பநிலை 36°C முதல் 39°C வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலும் 35°C முதல் 38°C வரை வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்த்து, போதிய அளவு நீர் அருந்தி பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.