எகிப்தில் அமெரிக்க எரிவாயு கப்பல் மீது தாக்குதல்!
31 ஆடி 2026 வெள்ளி 08:33 | பார்வைகள் : 415
எகிப்தின் மத்திய தரைக்கடல் துறைமுகம் டாமியெட்டாவில், அமெரிக்காவிற்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது ட்ரோன் ஒன்று தாக்கியுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.
டாமியெட்டாவில் இரண்டு எரிவாயு டேங்கர்கள் தீப்பிடித்ததாக இஞ்ச்கேப் துறைமுக சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
எகிப்தில் உள்ள மத்திய தரைக்கடல் துறைமுகத்தில் வெடிப்புச் சம்பவம் பதிவானதை அடுத்து, உள்ளூர் அதிகாரிகள் உடனடியாகப் பதிலளித்தனர் என இன்சாபே துறைமுக சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எகிப்தின் டாமியெட்டா துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்திற்குப் பின்னர் நிலைமைகட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவிற்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது ட்ரோன் ஒன்று தாக்கியதாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே கூறியது.
எல்என்ஜி முனையத்தில் சரக்கு இறக்கும் பணிகளின் போது ஒரு வெடிப்பு நிகழ்ந்ததாக இஞ்ச்கேப் தெரிவித்தது. சம்பவமான கப்பல்கள் துறைமுகப் பகுதிக்கு வெளியே பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று இஞ்ச்கேப்பின் அறிக்கை கூறுகிறது.
மேலும் மற்ற கப்பல் நிறுத்துமிடங்கள் மற்றும் முனையங்களில் இரவு நேரத்தில் துறைமுகச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire