Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்பு,கல்வி துறைகளில் இந்தியா - பிரிட்டன் இணைந்து செயல்படும்: பிரதமர் மோடி

பாதுகாப்பு,கல்வி துறைகளில் இந்தியா - பிரிட்டன் இணைந்து செயல்படும்: பிரதமர் மோடி

1 ஆவணி 2026 சனி 06:14 | பார்வைகள் : 445


கல்வி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகரங்களில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் ஆக தொழிலாளர் கட்சியின் ஆண்டி பர்ன்ஹம் சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹம் உடன் பேசியது மகிழ்ச்சி பிரதமராக பதவியேற்றதற்கு பாராட்டுகளையும், பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.தொழில்நுட்பம், பாதுகாப்பு சுத்தமான எரிசக்தி, கல்வி மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் இரு நாட்டு உறவை  புதிய உயரத்துக்கு கொண்டு செல்லவும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டோம்.

சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வழங்கும் முதலீட்டு வாய்ப்புகளை, இந்தியா பிரிட்டன் மக்களின் செழிப்பு மற்றும் நலனுக்காக முழுமையாக பயன்படுத்த இணக்கமக செயல்படுவோம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.