Paristamil Navigation Paristamil advert login

யாழில் இரட்டைச் சகோதரிகளின் விபரீத செயல்

யாழில் இரட்டைச் சகோதரிகளின் விபரீத செயல்

2 ஆவணி 2026 ஞாயிறு 14:25 | பார்வைகள் : 731


யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.