Paristamil Navigation Paristamil advert login

அனுமதிக்கப்படாத இடங்களில் நீராடினால் இனி 68 யூரோக்கள் அபராதம்!!

அனுமதிக்கப்படாத இடங்களில் நீராடினால் இனி 68 யூரோக்கள் அபராதம்!!

2 ஆவணி 2026 ஞாயிறு 15:55 | பார்வைகள் : 1986


அனுமதிக்கப்படாத பகுதிகளிலும், சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ள கடற்கரை அல்லது நீர்நிலைகளிலும் நீராடுபவர்களுக்கு இனி 68 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்பு இந்த அபராதம் 38 யூரோக்களாக இருந்தது. மேலும், அதிகாரிகள் நேரடியாக அபராதச் சீட்டை (procès-verbal) வழங்க முடியும்.

சமீப காலமாக சட்டவிரோத நீராடல்கள் அதிகரித்ததையும், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் அதிகரித்ததையும் தொடர்ந்து, ஆகஸ்ட் 2 அன்று வெளியிடப்பட்ட புதிய அரசாணை இந்த கடுமையான நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதிமுறையின் நோக்கம், ஆபத்தான நடத்தைகளைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், நீர்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாகும். இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

சுகாதார அதிகாரிகளின் தகவலின்படி, கடந்த இரண்டரை மாதங்களில் 274 பேர், அதில் 37 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் கடும் வெப்ப அலை காலங்களில் பதிவாகியுள்ளன.