Paristamil Navigation Paristamil advert login

இலங்கை முழுவதும் முன்னாள் பொலிஸ் மா அதிபரை தேடும் பொலிஸார்

இலங்கை முழுவதும் முன்னாள் பொலிஸ் மா அதிபரை தேடும் பொலிஸார்

3 பங்குனி 2025 திங்கள் 10:53 | பார்வைகள் : 5779


முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாக கூறப்படும் 5 வீடுகளை குற்றப் புலனாய்வு பிரிவு சுற்றிவளைத்துள்ளனர்.

சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, அவரைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்ற நிலையில் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளில் மூன்று வீடுகளும் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் இந்த சுற்றிவளைப்பின் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை, வெலிகம, பெலேன பகுதியில் உள்ள W15 என்ற சுற்றுலா ஹோட்டலில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அதற்கு பழிவாங்கும் வகையில் வெலிகம பொலிஸாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

கொழும்பு குற்றப்பிரிவின் சார்ஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொரு அதிகாரி காயமடைந்த சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் ஆறு அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3