இலங்கையில் தீவிரமாக தேடப்படும் பெண் - கண்டுபிடித்துக் கொடுத்தால் 12 லட்சம் ரூபாய்
5 பங்குனி 2025 புதன் 08:29 | பார்வைகள் : 10747
பாதாள உலகக் குழுத் தலைவர் 'கணேமுல்ல சஞ்சீவ'வின் கொலையுடன் தொடர்புடைய காணாமல் போன பெண் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு உதவியான தகவல்களுக்கு அறிவிக்கப்பட்ட வெகுமதியை இலங்கை பொலிஸ் அதிகரித்துள்ளது.
அதன்படி, பொலிஸ் தற்போது அந்தத் தொகையை முந்தைய ரூ.1 மில்லியனில் இருந்து ரூ.1.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு, கட்டுவெல்லகமவைச் சேர்ந்த 25 வயதான இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், பிப்ரவரி மாதம் கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிதாரருக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், எனவே அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக செவ்வந்தியின் தம்பி மற்றும் தாயார் உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதை பொலிஸ் திணைக்களம் உறுதி செய்துள்ளது. மேலும், தகவல் தெரிந்தவர்கள் 071-8591727 அல்லது 071-8591735 என்ற அவசர அழைப்புகள் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் உள்ள எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் திட்டமிட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ 19.02.2025 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire