Paristamil Navigation Paristamil advert login

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக ரணிலுக்கு அழைப்பு

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக ரணிலுக்கு அழைப்பு

11 சித்திரை 2025 வெள்ளி 13:14 | பார்வைகள் : 3581


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில்  ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கு விசாரணைக்காகவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஆணையம் அவரிடம் விசாரிக்கும்.

பிரதமராக இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன், மாகாண சபை நிதியை நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பதைத் தடைசெய்து திறைசேரி செயலாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதாக ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த முடிவு குறித்து அப்போது ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மற்றும் பிற மாகாணத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் அத்தகைய வைப்புத்தொகை திரும்பப் பெறப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2