Paristamil Navigation Paristamil advert login

செம்மணியில் அணையா தீபம் ஏற்றப்பட்டது - போராட்டம் ஆரம்பம்

செம்மணியில் அணையா தீபம் ஏற்றப்பட்டது - போராட்டம் ஆரம்பம்

23 ஆனி 2025 திங்கள் 10:59 | பார்வைகள் : 9772


செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி "அணையா தீபம்" தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.


செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று, மத தலைவர்களின் ஆத்ம உரை இடம்பெற்றது.

மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த போராட்டமானது நாளை மறுதினம் புதன்கிழமை வரையிலான மூன்று தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2