Paristamil Navigation Paristamil advert login

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் அறிவிப்பு

29 ஆனி 2025 ஞாயிறு 12:28 | பார்வைகள் : 8332


2024 (2025) இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு  எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் சமீப நாட்களாக பரவி வரும் பல்வேறு செய்திகள் தவறானவை என்றும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.