கணவரை பிரியும் ஹன்சிகா?
4 ஆவணி 2025 திங்கள் 15:48 | பார்வைகள் : 6115
நடிகை ஹன்சிகா கொரோனாவுக்கு பின் மார்க்கெட் இழந்து தவித்து வந்தார். இதனால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த அவர், கடந்த 2022ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டார் ஹன்சிகா. இவர்கள் இருவரும் காதலிக்க முக்கிய காரணமாக இருந்தது அவரது தோழி தான். ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் முதலில் திருமணம் செய்துகொண்டார். அப்போது ஹன்சிகா உடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஹன்சிகாவை திருமணம் செய்துகொண்டார் சோஹைல்.
நடிகை ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது. அதுமட்டுமின்றி இவரது திருமணம் ஒரு ஆவணப்படமாக வெளியானது. கணவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஹன்சிகா, சமீப காலமாக அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஹன்சிகா தனது அம்மா வீட்டில் வசித்து வருகிறாராம். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் உறுதி என பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
தற்போது வெளியாகி உள்ள தகவல்படி நடிகை ஹன்சிகாவும், அவரது கணவர் சோஹைலும் விவாகரத்து தொடர்பாக கோர்ட்டுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது விவாகரத்து செய்தி வெளிவர வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் விவாகரத்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அண்மையில், தனுஷ், ஜிவி பிரகாஷ், ரவி மோகன், இயக்குனர் பாலா, இசையமைப்பாளர் இமான், நடிகை சமந்தா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், தற்போது ஹன்சிகாவின் பெயரும் அதில் அடிபடுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire