பென் ஸ்டோக்ஸ் திடீர் விலகல்...! அணியில் நடந்த மாற்றங்கள்
30 ஆடி 2025 புதன் 17:18 | பார்வைகள் : 2987
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.
ஓவலில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் வெளிப்படையாக ஏமாற்றமடைந்தேன். என் வலது தோளில் ஒரு நல்ல கிழிசல் ஏற்பட்டுள்ளது. அபாயம் மற்றும் வெகுமதியை எடைபோட்டேன்.
காயத்தை மோசமாக பாதிக்கும் வகையில் அபாயம்தான் இருந்தது. எனவே, நான் இப்போது சிகிச்சை, ஓய்வு எடுத்துக்கொள்ள தொடங்குகிறேன். அத்துடன் குளிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதில் கவனம் செலுத்தத் தொடங்குவேன்" என தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் ஓலி போப் (Ollie Pope) அணித்தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாஸன் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோரும் ஓவல் டெஸ்டில் விளையாட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire