ஜிஎஸ்டி வரி குறைப்பு: நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம்!
5 புரட்டாசி 2025 வெள்ளி 12:37 | பார்வைகள் : 2867
இந்தியப் பொருளாதாரம், அமெரிக்கா மற்றும் சீனாவை விட வேகமாக வளர்ந்து வருகிறது, என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சய் சன்யால் கூறியுள்ளார். ஜிஎஸ்டி குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
சீர்திருத்தம்
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்து ஆங்கில சேனலில் நடந்த கலந்துரையாடலில் சஞ்சய் சன்யால் கூறியதாவது: சீர்திருத்தங்கள் மற்றும் கட்டமைப்பு ஸ்திரத்தன்மையால் ஆதரிக்கப்படும் நாட்டின் வளர்ச்சி வேகம் , அதை தனித்துவமான வலுவான நிலையில் வைக்கிறது. ஏதாவது பேரழிவு நிகழாத வரையில், அடுத்த 24 மாதங்களில் ஜெர்மனியை முந்தி உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவை காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறோம்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மகத்துவமானது. ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துவதன் மூலம் கட்டமைப்பு சீர்திருத்தத்தை நாங்கள் செய்தோம். பின்னர் அதை உறுதிப்படுத்தினோம். இப்போது அந்த அமைப்பை மிகவும் திறமையாகச் செயல்படுத்த செயல்முறை சீர்திருத்தத்தை செய்கிறோம்.
இன்னும் பல
உலகளாவிய தடைகள் இருந்த போதும், இந்தியாவின் பெரிய பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளது. பணவீக்கம் சுமார் 2 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இறையாண்மை மதிப்பீடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வங்கித்துறை வலுவான ஆரோக்கியத்துடன் உள்ளது. இன்னும் சீர்திருத்தங்கள் வர உள்ளன. பார்லிமென்டில் ஜன் விஸ்வாஸ் மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது. இது 16 வெவ்வேறு சட்டங்களில் 330க்கும் மேற்பட்ட விதிகளை குற்றமற்றதாக்க முயல்கிறது. இது வணிகத்துக்கு ஏற்ற சூழலுக்கு வழிவகுக்கிறது.கப்பல் கட்டுதல் , மின்னணுவியல் மற்றும் பிற துறைகளில் தொடர்ச்சியாக சீர்திருத்தங்கள் வர உள்ளன. இத்துடன் முடியவில்லை. இன்னும் நிறைய வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நம்பிக்கை
மூத்த நிதி ஆலோசகர் சைலேஷ் ஹரிபக்தி கூறுகையில், உண்மையில் மக்கள் பயனடைவதை எப்படி உறுதி செய்வது? இந்தியாவின் 75% இன்னும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரதமரின் கனவான வளர்ச்சியடைந்த பாரதத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதைச் செய்ய, வளர்ச்சியில் முதலீடு செய்ய நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த சீர்திருத்தத்தின் மூன்று நன்மைகள் என்னவென்றால், நம்பிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, பல வரி செலுத்துவோரின் பார்வையில் இருந்து, அரசாங்கம் நியாயமானது மற்றும் அமைப்பு மீதான அவர்களின் நம்பிக்கை மிகவும் வலுவாக இருப்பதால், அது சிலருக்கு அநீதியாக நடந்து மற்றவர்களுக்கு சாதகமாக இருக்காது என்று நான் சொல்ல முடியும் என்றார்.
சரியான திசை
துருவா அட்வைசர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பொருளாதார வல்லுனருமான தினேஷ் கனபார் கூறியதாவது: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு மூலம் சமூக சீர்திருத்தத்தை பொருளாதார சீர்திருத்தத்துடன் பிரதமர் எங்கோ இணைக்கிறார் என்பதை நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும், . இது அடிப்படையானது . பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் அந்த வழியில் பார்த்தேன். அவருக்கு இந்திய சமூகத்தின் நேரடி அனுபவம் உள்ளது, மேலும் அவர் சில நேரங்களில் அதை சரியான திசையில் நகர்த்த தேவையான தந்திரங்களை எடுத்துக்கொள்கிறார் என்றார்.
கேபிஎம்ஜியின் மறைமுக வரிகளின் தேசிய தலைவர் தலைவர் அபிஷேக் ஜெயின் , அனைவரும் வந்து முதலீடு செய்ய விரும்பும் சிறப்பான இடத்தில் இந்தியா உள்ளது. அதிகவேகமாக வளரும் பொருளாதாரம் மற்றும் பெரிய முதலீடு சந்தை என்ற அடிப்படையில் இந்தியா மிகப்பெரிய வாய்ப்பாக மாறி உள்ளது என்றார்.
சிஐஐ தேசிய கவுன்சில் உறுப்பினர் தியாகராஜன் பேசும் போது, இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மட்டும் அல்லாமல், பணவீக்க மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் அடிப்படை மாற்றங்களை இயக்கும நாடகாகவும் உலகளவில் பார்க்கப்படுவதை பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார்.
வணிக நிபுணர் அஜய் பக்கா பேசும் போது, இந்த வரி சீர்திருத்தம் மூலமாகஆறு மாதங்களில் ரூ.48 ஆயிரம் கோடியை இந்தியர்கள் மிச்சப்படுத்துவார்கள். ஆண்டுதோறும் 1 லட்சம்கோடி இந்தியர்களின் சேமிப்பில் இருக்கும் என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire