Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மாயமான யுவதியை தேடும் பொலிஸார்

இலங்கையில் மாயமான யுவதியை தேடும் பொலிஸார்

21 ஆவணி 2025 வியாழன் 09:46 | பார்வைகள் : 3168


கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக மாவனெல்லை  பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள யுவதியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காணாமல்போயுள்ள யுவதியின் விபரங்கள் ;

பெயர் - எதிரிசிங்ககே தருஷி செவ்வந்தி திசாநாயக்க 
வயது - 21
முகவரி - கெடெப்ப, கல்அத்தர, மாவனெல்லை , கேகாலை
இந்த புகைப்படத்தில் உள்ள தந்தை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் 071- 8591418 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.