முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அதியுச்ச பாதுகாப்பு: ஆயுதங்களுடன் அதிகாரிகள்
24 ஆவணி 2025 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 3371
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க, இரண்டு ஜெயிலர்கள் உட்பட எட்டு சிறை அதிகாரிகள் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மருத்துவமனையைச் சுற்றி சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர், மருத்துவ பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீரடைந்தவுடன் அவர் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire