சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் தொடங்குகிறதா?
26 புரட்டாசி 2025 வெள்ளி 14:32 | பார்வைகள் : 3700
வெற்றிமாறன் –சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த படமும் அடுத்தகட்டம் நோக்கி நகர்வதில் சிக்கல் உருவானது. ஏனென்றால் சிம்பு கேட்கும் சம்பளத்தால் தாணு அந்த படத்தினைத் தயாரிக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு தொடங்கும் அன்று படத்துக்காக ஏற்கனவேப் படமாக்கப்பட்ட ப்ரோமோ வீடியோவையும் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire