Paristamil Navigation Paristamil advert login

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: கரூர் சம்பவம் குறித்து விஜய் வேதனை

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: கரூர் சம்பவம் குறித்து விஜய் வேதனை

28 புரட்டாசி 2025 ஞாயிறு 09:07 | பார்வைகள் : 5694


கரூரில் நடந்த சம்பவத்தால் இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன் என்று விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்