Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கில் போர்: இந்தியா கவலை

மத்திய கிழக்கில் போர்: இந்தியா கவலை

1 பங்குனி 2026 ஞாயிறு 05:02 | பார்வைகள் : 1799


மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் நிலைமை கவலை அளிக்கிறது என இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதட்டத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பதட்டங்களைத் தணிக்கவும், பிரச்னைகளைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். பிராந்தியத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.

இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். தூதரகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2