Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு பதற்றம்: எரிபொருள் விலைகள் மேலும் உயர்வு – குறைவு சாத்தியம் இல்லை!!

மத்திய கிழக்கு பதற்றம்: எரிபொருள் விலைகள் மேலும் உயர்வு – குறைவு சாத்தியம் இல்லை!!

19 பங்குனி 2026 வியாழன் 16:00 | பார்வைகள் : 3336


மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போராலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதாலும் உலகளவில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில வாரங்களாக கணிசமாக அதிகரித்துள்ளன.

இந்த நிலைமையில் விலைகள் விரைவில் குறையும் சாத்தியம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்சின் எண்ணெய் துறை பேச்சாளர் Olivier Gantois தெரிவித்ததாவது, ஒரு பேரல் எண்ணெய் விலை தற்போது 115 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. போருக்கு முன்பு இது 65 முதல் 70 டொலர் வரை இருந்தது.

மத்திய கிழக்கில் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் தொடர்வதால் சந்தையில் அச்சம் நிலவுகிறது; இதனால் விலைகள் மேலும் உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

பிரான்சில் தற்போது டீசல் விலை லிட்டருக்கு சுமார் 2.08 யூரோவும், பெட்ரோல் (SP95) விலை 1.95 யூரோவும் உள்ளது. இருப்பினும், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் எந்த அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதும், கையிருப்பு இருப்பதும் இந்த நிலையை சமாளிக்க உதவுகிறது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்