Paristamil Navigation Paristamil advert login

பிரான்சிலும் மூளைக்காய்ச்சலுடன் தொடர்புடைய ஒருவர் மருத்துவமனையில்!!

பிரான்சிலும் மூளைக்காய்ச்சலுடன் தொடர்புடைய ஒருவர் மருத்துவமனையில்!!

19 பங்குனி 2026 வியாழன் 21:39 | பார்வைகள் : 4114


இங்கிலாந்தில் மூளைக்காய்ச்சல் ( méningite) தொற்று வேகமாக பரவி, மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான வழக்குகள் Canterburyஇல் உள்ள ஒரு நைட் கிளப்புடன் தொடர்புடையவை. 

இந்த நிலைமை “முன்னெப்போதும் இல்லாதது” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், மேலும் கென்ட் பல்கலைக்கழக வளாகத்தில் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக ஆன்டிபயாட்டிக் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது, மேலும் ஆயிரக்கணக்கான தடுப்பூசி டோஸ்கள் தயாராக உள்ளன. 

இதற்கிடையில், கென்ட் (Kent) பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஒருவர் பிரான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவரது நிலைமை சீராக உள்ளது, மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் méningocoque வகை B எனப்படும் பக்டீரியாவால் ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தான தொற்றாகும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் விரைவில் உயிரிழப்பு ஏற்படலாம். சிகிச்சை அளித்தாலும் 10% நோயாளிகள் உயிரிழக்கின்றனர்; 25% பேருக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படுகின்றன.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்