Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கா போர் விமானங்களை நிறுத்த அனுமதி மறுத்த ஜனாதிபதி அநுர

அமெரிக்கா போர் விமானங்களை நிறுத்த அனுமதி மறுத்த ஜனாதிபதி அநுர

20 பங்குனி 2026 வெள்ளி 10:34 | பார்வைகள் : 2097


இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்களை நிறுத்த அனுமதி வழங்க மறுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மார்ச் 4 முதல் 8 வரை, ஜிபூட்டியில் உள்ள அமெரிக்கத் தளத்திலிருந்து எட்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்திய இரண்டு போர் விமானங்களை மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வர அமெரிக்கா கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு இலங்கை “இல்லை” என பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை, தனது முக்கிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை பேணுவதோடு, தேயிலை முக்கியமாக வாங்கும் நாடாக உள்ள ஈரானுடனும் நல்லுறவைத் தொடர்ந்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.