பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!!
28 பங்குனி 2026 சனி 16:24 | பார்வைகள் : 4310
நேற்று இரவு பரிஸின் 8ஆம் வட்டாரத்தில் உள்ள 51 rue La Boétie-யில் அமைந்துள்ள “Bank of America” வங்கியின் முன்பு வெடிகுண்டு வெடிக்க முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் லைட்டர் பயன்படுத்தி குண்டை செயல்படுத்த முயன்றபோது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் இந்த நடவடிக்கையை கண்டறிந்தனர். குற்றவாளி போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் முன்பே நீதிமன்றத்தில் அறியப்பட்டவர். அவர் தன்னை செனகல் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.
“பரிஸில் பயங்கரவாதத் தன்மை கொண்ட வன்முறை முயற்சியை தடுக்க காவல்துறையினர் விரைவாக செயல்பட்டதற்கு பாராட்டுகள்,” என்று உள்துறை அமைச்சர் Laurent Nuñez X தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கை தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (PNAT) விசாரிக்கிறது.
இந்த வெடிகுண்டில் 5 லிட்டர் அளவிலான திரவம் கொண்ட ஒரு டப்பாவும், சுமார் 650 கிராம் வெடிபொருள் கொண்ட பட்டாசு சார்ந்த அமைப்பும் இருந்தது. இது பரிஸ் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் இருந்த இன்னொருவர் தப்பிச் சென்றார். கைது செய்யப்பட்ட இளைஞர், Snapchat மூலம் தொடர்பு கொண்டு, இந்த வேலைக்கு 600 யூரோக்கள் வழங்கப்பட்டதாக கூறினார். மேலும், ஒருவரால் காரில் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire