2,000 வருமான வரி செலுத்தாத செல்வந்தர்கள் மீது நடத்தப்பட்ட வரிச் சோதனையில் 104 மில்லியன் யூரோக்கள் மீட்பு!!
1 சித்திரை 2026 புதன் 21:42 | பார்வைகள் : 4183
சுமார் 13,000-க்கும் மேற்பட்ட செல்வந்த குடும்பங்கள் வருமான வரி செலுத்தவில்லை என்பதில், சுமார் 2,000 குடும்பங்கள் வரித்துறையால் ஆய்வு செய்யப்பட்டன. இவர்கள் சொத்து செல்வ வரி (IFI)க்கு தகுதியானவர்களாக இருந்தும், வருமான வரி “பூஜ்யம்” என அறிவித்திருந்தனர். இந்த நடவடிக்கைகள் மூலம் 104 மில்லியன் யூரோக்கள் வரி தொகை மீட்கப்பட்டது.
இந்த நிலைமைக்கு காரணங்களில் ஒன்றாக வரி மோசடி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தக் குடும்பங்களில் ஒரு பகுதி வரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 58% பேருக்கு வரி திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் பெருமளவு வரி மீட்பு நடந்துள்ளது.
சிலர் உண்மையில் குறைந்த வருமானம் கொண்டவர்களாக இருக்கலாம். அவர்கள் முன்னதாக வாங்கிய வீடுகள் அதிக மதிப்பைப் பெற்றிருக்கலாம் அல்லது பரம்பரைச் சொத்து பெற்றிருக்கலாம். மேலும், இந்தக் குழுவில் பலர் 68 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், குறைந்த ஓய்வூதிய வருமானம் கொண்டவர்களாக இருக்கலாம்.
மேலும், சில வருமானங்கள் நேரடியாக பெறப்படாமல் முதலீட்டாக சேமிக்கப்பட்டிருக்கலாம். அதிக செலவுகள் அல்லது இழப்புகள் காரணமாக வருமானம் குறைவாகக் காட்டப்பட்டிருக்கலாம். எனவே, இந்த நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire