OFII எச்சரிக்கை – குடியேற்ற நபர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிவு!!
6 சித்திரை 2026 திங்கள் 08:09 | பார்வைகள் : 4834
குடியேற்ற ஒப்பந்தமான (CIR) தொடர்பான நிர்வாக தளத்தில் 2026 ஜனவரி 1ஆம் திகதி அனுமதியற்ற அணுகல் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக சில நபர்களின் தனிப்பட்ட தரவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, அடையாள விவரங்கள் மற்றும் தொடர்பு தகவல்கள் (மின்னஞ்சல், தொலைபேசி எண் மற்றும் சிலரின் வசிப்பிட முகவரி) கசிந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் வங்கி தொடர்பான தகவல்கள் அல்லது கடவுச்சொற்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் கண்டறியப்பட்ட உடனேயே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தரவுகள் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகளை தவிர்க்கவும், ofii.fr முகவரியிலிருந்து அல்லாத இணைப்புகள் அல்லது கோப்புகளை திறக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகம் இருப்பின் நேரடியாக OFII அலுவலகத்தை அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் மூலம் அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. OFII எந்த நிலையிலும் கடவுச்சொற்கள் அல்லது வங்கி விவரங்களை கேட்காது என்றும், பணம் கோரும் எந்த கோரிக்கையும் அதிகாரப்பூர்வமல்ல என்றும் அதிகாரிகள் மீண்டும் நினைவூட்டியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire