தமிழகம் மேற்குவங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி
8 பங்குனி 2026 ஞாயிறு 07:37 | பார்வைகள் : 1688
2026ம் ஆண்டில், தமிழகம், மேற்கு வங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 200 பேருக்கு குடியுரிமை வழங்கிய, பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இன்று, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கு வந்த சுமார் 200 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நான் சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தபோது, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, மம்தா மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் அதை எதிர்த்தன. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்து அகதிகளுக்கு உரிமை உண்டு.
திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக, அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. ராகுல், மம்தா மற்றும் பிற எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் சிஏஏவை எதிர்த்தாலும், மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். 2026ம் ஆண்டில், தமிழகம், மேற்கு வங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். 2027ம் ஆண்டில், உத்தராகண்டில் பாஜ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்.
ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கனவை நனவாக்க ஒரு வரலாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ஹிந்து அகதிகளுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று அடிமைத்தன மனநிலையுடன் கூடிய அடக்குமுறை பிரிட்டிஷ் சட்டங்கள் ஒழிக்கப்படுவதே நோக்கம். புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் தண்டனை அல்ல, நீதியே முக்கியம் என்று இந்திய நெறிமுறைகளுக்கு ஏற்ப நீதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire