Paristamil Navigation Paristamil advert login

லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் - ஒருவர் கைது

லண்டனில்  கத்திக்குத்து தாக்குதல் - ஒருவர் கைது

30 சித்திரை 2026 வியாழன் 15:39 | பார்வைகள் : 1763


வடக்கு லண்டனில்  29.04.2026 அதிக யூத மக்கள் வசிக்கும் பகுதியான கோல்டர்ஸ் கிரீனில் இருவர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் காவல்துறை ஒருவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷோம்ரிம் என்ற அந்த அமைப்பு, எக்ஸ் என்ற ஊடகத்தில், ஒரு நபர் கத்தியுடன் ஓடுவதையும், பொதுமக்களில் உள்ள யூதர்களைக் குத்த முயற்சிப்பதையும் கண்டதாகவும், பின்னர் தங்கள் அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பிறகு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து டேசர் கருவியைப் பயன்படுத்தியதாகவும் அந்த அமைப்பு மேலும் கூறியது.

கடந்த ஒரு மாதத்தில், யூதர்களுடன் தொடர்புடைய வளாகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் இருபதுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்