Paristamil Navigation Paristamil advert login

3 நாடுகளுக்கு பயண தடை அறிவித்த UAE அரசு

3 நாடுகளுக்கு பயண தடை  அறிவித்த UAE அரசு

1 வைகாசி 2026 வெள்ளி 16:49 | பார்வைகள் : 2198


ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ நிலைகள் உள்ள நாடுகளின் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.

தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்யிருந்தாலும், ஹார்முஸ் முடக்கத்தால் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழலே உள்ளது.

மேலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தங்கள் நாட்டு குடிமக்கள் ஈரான், ஈராக், லெபனான் ஆகிய 3 நாடுகளுக்கும் செல்ல UAE அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து செய்து வெளியிட்டுள்ள அரசு செய்தி நிறுவனமான WAM, "தற்போதைய பிராந்திய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு, லெபனான் குடியரசு மற்றும் ஈராக் குடியரசு ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யும் ஐக்கிய அரபு அமீரக நாட்டினருக்குப் பயணத் தடை விதிக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் (MoFA) அறிவித்துள்ளது," என தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், 2 ராணுவ வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது உள்ள ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அனைவரும் உடனடியாகத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது.  

 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்