கோர்சில் வன்முறை - உணவகங்கள் தீக்கிரை!!
2 வைகாசி 2026 சனி 23:12 | பார்வைகள் : 3248
கோர்ஸ் தெற்குப் பகுதியில் (Corse‑du‑Sud) பகுதியில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு உணவகங்கள் தீவைக்கப்பட்டதாக தலைநகர் அஜாக்சியோ வழக்கறிஞர் அலுவலகம் மே 2 சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இரு சம்பவங்களிலும் குற்றச்செயல் தடமே முக்கியமாகக் கருதப்படுகிறது.
முதல் தீ — Sainte‑Lucie‑de‑Tallano
ஏப்ரல் 29 முதல் 30 இரவு, அதிகாலை 1 மணியளவில்:
Rossignoli என்ற உணவக‑வெளியில் உணவருந்தும் தெராஸ்பகுதி தீயில் அழிந்தது. சம்பவ நேரத்தில் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. யாரும் காயமடையவில்லை
வழக்கறிஞர் அலுவலகம்:
«ஆபத்தான முறையில் சொத்து அழித்தல்»
«தீப்பொருள் வைத்திருத்தல் மற்றும் எடுத்துச் செல்வது»
எனும் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இரண்டாவது தீ — Fozzano
அடுத்த இரவு, ஏப்ரல் 30 முதல் மே 1, அதிகாலை 2 மணியளவில், Fozzano பகுதியில் உள்ள ஒரு கடற்கரை உணவகம் தீவைக்கப்பட்டது. இது முதல் சம்பவத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உணவகமாகும்.
இங்கும், ஜோந்தார்மரிe மேற்கொண்ட விசாரணையில் குற்றச்செயல் தடமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
கோர்சிகாவில் குற்றங்கள்
அஜாக்சியோ வழக்கறிஞர் Nicolas Septe,
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள்
தீவைத்தல்
வற்புறுத்தல் (extorsion)
குற்றச்செயல் சொத்துக்கள் பறிமுதல்
போன்ற குற்றங்கள் 2026 இல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire