Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை

தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; பீயூஷ் கோயல் நம்பிக்கை

4 வைகாசி 2026 திங்கள் 08:03 | பார்வைகள் : 1529


தமிழகத்தில் பெரும்பான்மை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் பீயூஷ் கோயல் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, உறுதியான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதில் சந்தேகம் இருந்திருந்தால் டில்லியிலிருந்து, இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். தமிழகத்தில் பெரும்பான்மை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்.

இந்த முறை தமிழகத்தில் மாற்றம் வரும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா முழுவதும் வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழகமும் அதில் பங்கு பெற வேண்டும். தமிழக மக்கள் அதிகாரம் கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பீயூஷ் கோயல் தெரிவித்தார்.