Paristamil Navigation Paristamil advert login

டொராண்டோவில் கோர விபத்தில் சைக்கிள் ஓட்டுனர் பலி

டொராண்டோவில்  கோர விபத்தில் சைக்கிள் ஓட்டுனர் பலி

6 வைகாசி 2026 புதன் 08:29 | பார்வைகள் : 1832


டொராண்டோவின் ரான்செஸ்வேல்ஸ் வில்லேஜ் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

டொராண்டோ காவல்துறை தகவலின்படி, நேற்று மாலை சுமார் 4:10 மணியளவில் ரான்செஸ்வேல்ஸ் மற்றும் ஹோவர்ட் பார்க் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும், எஸ்யூவி ரக காரும் மோதிக்கொண்டன. விபத்தின் போது 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், காரின் அடியில் சிக்கிக்கொண்டார்.

மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

காரைச் செலுத்திய 40 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே தங்கி, காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். விபத்து நடந்த போது அந்த எஸ்யூவி கார் நிறுத்தப்பட்டிருந்தது.

மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாகச் சென்றதும், மழை காரணமாக சாலை ஈரமாக இருந்ததும் இந்த விபத்திற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

விபத்தைத் தொடர்ந்து ஹோவர்ட் பார்க் அவென்யூ மற்றும் டண்டாஸ் ஸ்ட்ரீட் சந்திப்புகள் மூடப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்