Paristamil Navigation Paristamil advert login

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்தாக்குதல் - 5 பேர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்தாக்குதல் - 5 பேர் பலி

9 வைகாசி 2026 சனி 10:03 | பார்வைகள் : 1817


போர் நிறுத்த உடன்படிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

பெய்ரூட் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள டைர் நகரத்திற்கு அருகேயுள்ள தவுரா கிராமம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள க்ஃபர் சவுபா கிராமம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைர் மாகாணத்தில் உள்ள ஆறு கிராம மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வடக்கு பகுதியை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு ராக்கெட்டை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும், மற்ற ராக்கெட்டுகள் வெற்று நிலப்பரப்பில் விழுந்ததாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3