Paristamil Navigation Paristamil advert login

போர் நிறுத்தத்தை மீறும் ரஷ்யா - உக்ரைன் ஜனாதிபதி

போர் நிறுத்தத்தை மீறும் ரஷ்யா - உக்ரைன் ஜனாதிபதி

12 வைகாசி 2026 செவ்வாய் 07:28 | பார்வைகள் : 1838


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே மே 9-ஆம் திகதி முதல் அமலில் இருக்கும் 3 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை குறித்து உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வான்வழித் தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், போர்முனைகளில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறையவில்லை என அவர் சாடியுள்ளார்.

மே 9-ஆம் திகதி போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து, உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா நடத்தி வந்த பாரிய ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தவிர்த்து வருகிறது.

இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 2,000 போர்க்கைதிகள் (ஆளுக்கு 1,000 பேர்) பரிமாற்றம் செய்யப்பட்டதை ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

"ரஷ்யா முழு அளவிலான போருக்கு மீண்டும் திரும்பத் திட்டமிட்டால், அதற்கான எங்களது பதிலடி உடனடியாகவும், மிகவும் வலிமையாகவும் இருக்கும். 

தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் எங்களிடம் இருப்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளோம்" என ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2