இது திமுக அரசு விடைபெற வேண்டிய நேரம்: பீயூஷ் கோயல்
12 சித்திரை 2026 ஞாயிறு 13:31 | பார்வைகள் : 1453
இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தலாகும்; தமிழகம் ஒரு மாற்றத்தை விரும்புகிறது என மத்திய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பீயூஷ் கோயல் கூறியதாவது: தமிழக மக்கள் உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பெண்களையும் மதிக்காத ஒருவரை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதயநிதியின் கருத்துக்களால் தமிழக மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இந்த திமுக அரசு விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் கூடிய ஒரு நல்ல அரசு அமையும். நாம் அனைவரும் இணைந்து தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்போம்.
ராம சீனிவாசன் மதுரையில் மிகவும் பிரபலமான ஒரு ஆளுமையாவார். மக்களிடமிருந்து அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளதாக நான் அறிகிறேன்; இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தலாகும். தமிழகம் ஒரு மாற்றத்தை விரும்புகிறது. இவ்வாறு பீயூஷ் கோயல் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire