மக்ரோனிற்கு ஹெஸ்புல்லா கண்டனம்!
19 சித்திரை 2026 ஞாயிறு 10:54 | பார்வைகள் : 2757
சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஹெஸ்புல்லா(Hezbollah):
பிரெஞ்சு Casques bleus மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் “எந்த தொடர்பும் இல்லை” எனத் தெளிவாக மறுத்துள்ளது
சம்பவத்திற்கான பொறுப்பை முன்கூட்டியே சுமத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது
லெபனான் இராணுவம் மேற்கொண்டு வரும் விசாரணையின், அதிகாரப்பூர்வ முடிவுகளை காத்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதற்கு மாறாக:
பிரான்ஸ் குடியரசுத் தலைவர் எம்மானுவல் மக்ரோன் ஹெஸ்புல்லா தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார், என ஹெஸ்புல்லா கண்டித்துள்ளது.
FINUL ஆரம்ப விசாரணைகளும்
தாக்குதல் அரசு சாரா ஆயுதக் குழுவால்,ஹெஸ்புல்லா சேர்ந்திருக்கலாம் எனக் காட்டுகின்றன
இரு தரப்புகளின் நிலைப்பாடுகள் மாறுபட்டுள்ளன,அதனால் விசாரணை முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
விசாரணை நிலை
லெபனான் இராணுவம் சம்பவத்திற்கான அதிகாரப்பூர்வ விசாரணையை மேற்கொண்டு வருகிறது
தாக்குதலின் தன்மை, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்,சம்பவ இடத்தில் இருந்த குழுக்களின் அடையாளம் ஆகியவை விசாரணையின் மையப் பகுதிகள் ளாக உள்ளன.
FINUL மற்றும் லெபனான் அதிகாரிகள் கூட்டு தகவல் சேகரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் லெபனான் அரசு ஹெஸ்புல்லாவை தங்கள் நாட்டிற்குள் இயங்க அனுமதித்துள்ளமையும், அங்கிருந்தே தாக்குதல்கள் நடாத்த அனுமதித்துள்ளமையும், லெபனானன் அரசின் விசாரணைகளை கேள்விக்குறியாகவும் ஆக்கியுள்ளன.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire