ஆங்கில கால்வாய் பகுதியில் மனித கடத்தல்களைத் தடுக்க பிரான்ஸ்–பிரிட்டன் அரசுகள் புதிய ஒப்பந்தம்!!
23 சித்திரை 2026 வியாழன் 07:45 | பார்வைகள் : 2523
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் ஆங்கில கால்வாய் வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றப் பயணங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், 2018ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட “Sandhurst” ஒப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் மட்டும் 41,472 பேர் சிறிய படகுகள் மூலம் பிரிட்டனை சட்டவிரோதமாக சென்றடைந்துள்ளதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டன் வழங்கும் நிதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 766 மில்லியன் யூரோக்கள் வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும், அதில் 186 மில்லியன் யூரோக்கள் நடவடிக்கைகளின் செயல்திறனைப் பொறுத்து வழங்கப்படும். உறுதியாக வழங்கப்படும் தொகை 580 மில்லியன் யூரோக்களாகும். இது முந்தைய ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட 540 மில்லியன் யூரோக்களை விட அதிகமாகும்.
மேலும், கடற்கரைப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படுகின்றன. 2029ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 1,400 ஆக உயர்த்தப்படும். அதோடு, ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மின்னணு கண்காணிப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டு, குறிப்பாக “வாடகைப் படகுகள்” மூலம் நடைபெறும் சட்டவிரோதப் பயணங்களைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan