கென்யா மாணவிகள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்J - 17 பேர் பலி
28 வைகாசி 2026 வியாழன் 15:43 | பார்வைகள் : 1520
கென்யாவில் மாணவிகள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததுடன், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய கென்யாவின் கில்கில் பகுதியிலுள்ள உதுமிஷி பெண்கள் அகாடமி மேல்நிலைப் பாடசாலை விடுதியில், மாணவிகள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்த மாணவிகளை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தீயணைப்பு படையினருக்கு இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகே தகவல் வழங்கப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire