மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தம்
14 ஆனி 2026 ஞாயிறு 12:32 | பார்வைகள் : 1770
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப்பும், மத்தியஸ்த நாடான பாகிஸ்தானும் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமையன்று மின்னணு முறையில் அதில் கையெழுத்திட இஸ்லாமாபாத் தயாராகி வருவதாகவும்,
இந்த நிலையில், ஈரானுடனான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகவிருப்பதாகவும், அது கையெழுத்தானதும் ஹார்முஸ் நீரிணை உடனடியாக கப்பல் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும் என்றும் ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
ஆனால், ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்க ஈரான் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி மறுத்துள்ளார்.
மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் சரியான திகதியைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இருப்பினும் அது ஞாயிறன்று நடக்காது என்றே இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் நாட்களில் இந்த ஒப்பந்தம் தொடர்பான நகர்வுகள் நடப்பதற்கான சாத்தியக்கூற்றை நிராகரிக்க முடியாது எனவும், இருப்பினும், மறுதரப்பின் தயக்கத்தின் காரணமாக, இந்த செயல்முறை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பதை உறுதி செய்ய மறுத்துள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர், இது ஒரு சிறந்த ஒப்பந்தம் மற்றும் மிகவும் வலுவான ஒப்பந்தம் என மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, இரு தரப்பினரும் ஒரு ஆரம்பகட்ட உடன்பாட்டிற்கு நெருக்கமாக முன்னேறுவது இது முதல் முறையல்ல.
ஆனால் ஒவ்வொரு முறையும் இஸ்ரேலின் குறுக்கீடு காரணமாக அது தோல்வியில் முடிந்தது. தற்போது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப், நாங்கள் முன்பை விட ஒரு சமாதான ஒப்பந்தத்தை முன்னெடுப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி விலைகளைக் கடுமையாக உயர்த்தியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்களையும் கொன்றுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் ஈரான் மற்றும் லெபனான் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
லெபனானில், இந்தப் போர் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire